தொடரும் நயன்தார விக்னேஷிவன் சர்ச்சைகள்

குளிகை நேரத்தில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் தாலி கட்டிய நேரம் சரியில்லை என்றும், இதனால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் ஜோதிடர் ஒருவர் கணித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.

சலசலப்பில் தமிழ் சினிமாத்துறை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவத்தால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன.

ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

விசாரணை வளையத்தில் நயன்-விக்கி
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது.

இது குறித்த விசாரணை அறிக்கை பெற்றவுடன் அதில் விதிமீறல் இருக்கிறதா, முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தாலி கட்டிய நேரம் சரியில்லை
கடந்த ஜூன் 9ம் தேதியன்று வியாழக்கிழமை காலை 10.20 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். அன்று வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை புதன்ஹோரை நேரமாகும். அந்த நேரத்தில் திருமணம் நடந்திருக்கிறது. கௌரி பஞ்சாங்கப்படி பார்த்தால் அந்த நேரம் சோரம் என்று சொல்லப்படுகிறது.

பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் பலவித குளறுபடிகள் ஏற்படும் என்றும், இதன் பிறகு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல பிரச்சினைகளில் சிக்குவார்கள் என்று அன்றே ஜோதிடர் ஒருவர் கணித்து கூறினார்.

ஏற்கெனவே, நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜாதகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் இவர்கள் இருவரும் ஒன்றாக பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு பரிகாரங்களைச் செய்து வந்தனர்.

தற்போது, திருமணம் ஆன 4 மாதத்திலேயே இரட்டை குழந்தை விவகாரத்தில் சர்ச்சையில் இருவரும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.